நான் ரசித்த பாடல்களை உங்களுடன் பகிரவே இந்தத் தளத்தை உருவாக்கியுள்ளேன்.அப்பப்போ இதில் நான் ரசித்த பாடல், இசை ஒலிக்கும்....
இதை நிறுவ எனக்கு அயராது உதவி செய்த சக வலைப்பதிவர் "வினையூக்கி"...செல்வகுமாருக்கு என் இதய பூர்வமான நன்றி!
சென்னை பதிவர் பட்டறையின் பின்; உதவி கேட்டால் செய்யமுடியுமெனக் கூறிப் பதிவிட்ட போது ; நான்
உங்களுக்கு ஒரு நல்ல மாணவன் கிடைத்துள்ளான். எனக்கூறி... இந்த பாடல் சேர்க்கும் விதம் பற்றிக் கேட்டபோது சளைக்காமல் என் கேள்விகளுக்கு பதில் தந்து ஆக்கபூர்வமான ஆலோசனையும் தந்ததால்
இன்று இந்தப் பதிவை என்னால் இட முடிகிறது.
என் பதிவுலகம் பின்னூட்டத்துடன் இருந்த போது , கூடல் குமரன் வாருங்கள் எனக் கூப்பிட்டு என் முதல் கட்டுரையைத் தன் தளத்தில் இட்டார்.; குறிஞ்சி மலைநாடர்...குடிலமைத்து வெளிக்கொணர்ந்தார். ஊரோடி பகீ பீற்றாப் பிரச்சனையில் இருந்து மீட்டார். சாரல் சயந்தன் என் குடிலுக்குப் புது அலங்காரம் செய்தார். இப்போ வினையூக்கி செல்வகுமார் பாடல் ஒலிக்க வைத்துள்ளார்....
உங்கள் அனைவர் உதவும் மனதுக்கு; தலை சாய்க்கிறேன்.
தொடர்ந்தும் தேவைக்குதவுவீர்கள். என நம்புகிறேன்.
இத்தளத்தில் முதற் பாடலாக மகாகவி பாரதியாரின் ;இன்றைய இளம் பாடகிகளில் என் உள்ளம் கவர்ந்த பம்பாய் ஜெயஸ்ரீ அவர்கள் குரலில் வந்த பாடல்..
மூலப்பாடலில் 4 வரிகள் பாத்திரம்; இசையுருக் கொடுத்துள்ளார்கள்; மிக உருக்கமாகப் பாடியுள்ளார்.
என்னை வெகுவாகக் கவர்ந்தது.
இப்பாடலைக் கேட்ட....
2 comments:
எனக்கும் இந்தப் பாடலும் அதை இதே பாடகியின் குரலில் கேட்க மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த வடிவில் அல்ல; பாரதி படத்திற்காக இசைஞாநி இசையமைத்து ஜெயஸ்ரீ பாடிய வடிவம். கேட்டுப் பாருங்கள் மெய்சிலிர்க்க வைக்கும்!
அப்புறம் அதையும் பதிவில் போடுவீர்கள் :-)
சாணக்கியன்!
அந்தப் பாடலும் கேட்டுள்ளேன்.அந்த இசைவடிவும் அழகே..
இளையராஜாவும் வரி உணர்ந்து இசை அமைத்துள்ளார்.
ஜெயஸ்ரீ உருகியுள்ளார்.
Post a Comment