திரைப்படம் : சிவகெங்கைச் சீமை
இயற்றியவர் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் -ராமமூர்த்தி
குரல் : பி.லீலா
சாந்துப் பொட்டு தள தளக்க!
சந்தனப் பொட்டு கம கமக்க!
மதுரைக் கோபுரம் தெரிந்திடச் செய்த
மருது பாண்டியர் பாருங்கடி...
பத்தினி பெண்மையைக் காப்பவராம்!
பாவலர் வறுமை தீர்ப்பவராம்!
சுத்த வீரர் எங்கள் மருது பாண்டியர்!
ஜெயக்கொடி பறப்பதைப் பாருங்கடி!
யானையைப் பிடித்து அடக்கியவர்!
ஆறடி வேங்கையை மடக்கியவர்!
வானமறவர் எங்கள் மருது பாண்டியர்!
வாழும் நகரம் இங்கு பாருங்கடி!
பார்வையில் எதிரிகள் பயப்படுவார்!
பாவையர் யாவரும் வசப்படுவார்!
காவியம் புகழும் மருது பாண்டியர்!
வாழ்க! வாழ்க! என்று வாழ்த்துங்கடி!!
கவியரசர் கண்ணதாசனின் பொருள் பொதிந்த சொற்களுக்கு
விஸ்வநாதன் -ராமமூர்த்தி வெகு சிறப்பாக இசைதொடுத்த
பாடல் , இளமைமுதல் ரசித்தேன்.
அழகான நடனம்...தெவிட்டாதது...
இன்றைய பாடற் காட்சிகள் பெருமூச்சை வரவைத்தன...
Showing posts with label சாந்துப் பொட்டு. Show all posts
Showing posts with label சாந்துப் பொட்டு. Show all posts
சாந்துப் பொட்டு.....சந்தனப் பொட்டு...
Posted by
யோகன் பாரிஸ்(Johan-Paris)
at
6
comments
Labels: கண்ணதாசன், சாந்துப் பொட்டு, சிவகெங்கைச் சீமை
Subscribe to:
Posts (Atom)
