சாந்துப் பொட்டு.....சந்தனப் பொட்டு...



திரைப்படம் : சிவகெங்கைச் சீமை
இயற்றியவர் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் -ராமமூர்த்தி
குரல் : பி.லீலா


சாந்துப் பொட்டு தள தளக்க!
சந்தனப் பொட்டு கம கமக்க!
மதுரைக் கோபுரம் தெரிந்திடச் செய்த
மருது பாண்டியர் பாருங்கடி...

பத்தினி பெண்மையைக் காப்பவராம்!
பாவலர் வறுமை தீர்ப்பவராம்!
சுத்த வீரர் எங்கள் மருது பாண்டியர்!
ஜெயக்கொடி பறப்பதைப் பாருங்கடி!

யானையைப் பிடித்து அடக்கியவர்!
ஆறடி வேங்கையை மடக்கியவர்!
வானமறவர் எங்கள் மருது பாண்டியர்!
வாழும் நகரம் இங்கு பாருங்கடி!

பார்வையில் எதிரிகள் பயப்படுவார்!
பாவையர் யாவரும் வசப்படுவார்!
காவியம் புகழும் மருது பாண்டியர்!
வாழ்க! வாழ்க! என்று வாழ்த்துங்கடி!!

கவியரசர் கண்ணதாசனின் பொருள் பொதிந்த சொற்களுக்கு
விஸ்வநாதன் -ராமமூர்த்தி வெகு சிறப்பாக இசைதொடுத்த
பாடல் , இளமைமுதல் ரசித்தேன்.
அழகான நடனம்...தெவிட்டாதது...
இன்றைய பாடற் காட்சிகள் பெருமூச்சை வரவைத்தன...

ஒரு மல்லிகை மொட்டு.......

ஒரு....



மல்லிகை......


மொட்டு........



வெய்யில்......


துளி...பட்டு....


சில்லெனப்...



பூத்தது... இதழ் விரித்து...





இந்த மல்லிகையின் பாட்டி ,ஈழத்தில் திருகோணமலையில் உள்ளார். இவள் தாயாரோ,ஈழத்தில் பிறந்து லண்டனில் உள்ளாள்.


இவளோ சென்ற சித்திரை பதியத்தில் லண்டனில் பிறந்தவள், இவளை பாரிசில் எங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து வளர்த்து...


இன்று இவள் பூத்திருப்பதை ஆசையோடு உங்களுடன் பகிர்கிறேன்.




இப்பாடல் ரங்க ராட்டினம் படத்தில் எஸ்.பி.பாலா பாடியது.


சங்கர் கணேசின் இசையில் வந்த நல்ல பாடல்...


**** சரியான சூரிய ஒளி கிட்டும் வரை ,பூக்கச் சிரமப்பட்டது. இப்போ நல்ல


இடத்தில் வைத்துள்ளோம்.




தைய தையா....




இந்தத் 'திருட்டுப் பயலே' படத்தில் இடம் பெற்ற , பாடல் எனக்கு மிகப் பிடித்தது.

சாதனா சர்க்கம் குரல் இனிமையாக உள்ளது. சிறிய உச்சரிப்புத் தவறுகளைக் கூட இவ்வினிய குரலுக்காக மறக்கலாம். நமது
தொலைக்காட்சி அறிவிப்பாளினிகளிலும் ஆயிரம் மடங்கு சிறப்பு.

அடக்கமான ஈர்க்கும் பரத்வாசின் ,சொற்களைக் கொல்லாத இசை.

வயலின், புல்லாங்குழல், தவில்.. அத்துடன் அருமையான இந்துஸ்தானி ஆலாபனை

இப்பாடலை யாத்தவர் யாரெனத் தெரியவில்லை. மிக அருமையான வரிகள்..
கேட்ட நாள் முதல் இந்தப் பாடல் பிடித்தது.


ஏறுமயில் ஏறிவிளையாடு முகம்!



நல்லூர் திருவிழாக்காலம், அப்பன் முருகனை நினைக்கவும்; அத்துடன் அன்றைய கச்சேரிகளில் இறுதிப்பாடலாக அமையும் திருப்புகழை நினைத்தும்.

இன்று தில்லானா இந்தத் திருப்புகழைத் துரத்தி விட்டது.

எனினும் சிலர் இன்றும் பாடுகிறார்கள்.

இது மதுரை சேஷ கோபாலன் அவர்கள் கச்சேரியில் இருந்து....

நின்னைச் சரணடைந்தேன்.....கண்ணம்மா


நான் ரசித்த பாடல்களை உங்களுடன் பகிரவே இந்தத் தளத்தை உருவாக்கியுள்ளேன்.அப்பப்போ இதில் நான் ரசித்த பாடல், இசை ஒலிக்கும்....

இதை நிறுவ எனக்கு அயராது உதவி செய்த சக வலைப்பதிவர் "வினையூக்கி"...செல்வகுமாருக்கு என் இதய பூர்வமான நன்றி!

சென்னை பதிவர் பட்டறையின் பின்; உதவி கேட்டால் செய்யமுடியுமெனக் கூறிப் பதிவிட்ட போது ; நான்
உங்களுக்கு ஒரு நல்ல மாணவன் கிடைத்துள்ளான். எனக்கூறி... இந்த பாடல் சேர்க்கும் விதம் பற்றிக் கேட்டபோது சளைக்காமல் என் கேள்விகளுக்கு பதில் தந்து ஆக்கபூர்வமான ஆலோசனையும் தந்ததால்
இன்று இந்தப் பதிவை என்னால் இட முடிகிறது.

என் பதிவுலகம் பின்னூட்டத்துடன் இருந்த போது , கூடல் குமரன் வாருங்கள் எனக் கூப்பிட்டு என் முதல் கட்டுரையைத் தன் தளத்தில் இட்டார்.; குறிஞ்சி மலைநாடர்...குடிலமைத்து வெளிக்கொணர்ந்தார். ஊரோடி பகீ பீற்றாப் பிரச்சனையில் இருந்து மீட்டார். சாரல் சயந்தன் என் குடிலுக்குப் புது அலங்காரம் செய்தார். இப்போ வினையூக்கி செல்வகுமார் பாடல் ஒலிக்க வைத்துள்ளார்....

உங்கள் அனைவர் உதவும் மனதுக்கு; தலை சாய்க்கிறேன்.

தொடர்ந்தும் தேவைக்குதவுவீர்கள். என நம்புகிறேன்.


இத்தளத்தில் முதற் பாடலாக மகாகவி பாரதியாரின் ;இன்றைய இளம் பாடகிகளில் என் உள்ளம் கவர்ந்த பம்பாய் ஜெயஸ்ரீ அவர்கள் குரலில் வந்த பாடல்..
மூலப்பாடலில் 4 வரிகள் பாத்திரம்; இசையுருக் கொடுத்துள்ளார்கள்; மிக உருக்கமாகப் பாடியுள்ளார்.
என்னை வெகுவாகக் கவர்ந்தது.
இப்பாடலைக் கேட்ட....




நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்னை)

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று (நின்னை)

தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் (நின்னை)

துன்ப மினியில்லை சோர்வில்லை தோற்ப்பில்லை
அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட (நின்னை)

நல்லது தீயது நாமறியோம் அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! (நின்னை)


ஆயிரம் தாமரை மொட்டுக்களே.....

இப்பாடல்.. வந்த காலத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்று இளையராஜாவுக்கு புகழ் சேர்த்தது.

பாரதிராஜா+இளையராஜா+வைரமுத்து கூட்டில் உதித்த முத்து.

எனக்கு என்றும் கேட்கப் பிடித்தது.

உங்களுக்கு!!!